சித்ரா பௌர்ணமியை ஒட்டி வெள்ளியங்கிரி சிவன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

கோவையில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரிமலை சிவன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். இங்கு வரும் பக்தர்களில் பலரும் ஏழுமலை ஏறி சிவனை வழிபட்டு வருகின்றனர். இவர்களுடன் சிவனடியார்களும் மலையேறி சிவனை வழிபாடு செய்து வருகின்றனர்.


கோவை: சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரி சிவன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோவையில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரிமலை சிவன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். இங்கு வரும் பக்தர்களில் பலரும் ஏழுமலை ஏறி சிவனை வழிபட்டு வருகின்றனர். இவர்களுடன் சிவனடியார்களும் மலையேறி சிவனை வழிபாடு செய்து வருகின்றனர்.

இதனால் இன்றைய தினம் வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. அதிகாலையிலிருந்து பக்தர்கள் மலை ஏறி சென்று சிவ பாடல்கள் பாடியும் சிவ நாமங்களை முழக்கமிட்ட படியும் சிவனை வழிப்பட்டு வருகின்றனர்.



மேலும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று வருகை புரிவதால் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பிலும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பக்தர்கள் மலை ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இரண்டு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தற்காலிக கழிவறை வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வருகிறார்களா என்பதை கண்காணிக்கவும் தனியார் அமைப்புகள், என்சிசி மற்றும் என்எஸ்எஸ் மாணவர்கள் சார்பில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கோவை மாநகரிலிருந்து வெள்ளியங்கிரி மலைக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதேசமயம் கோவில் அடிவாரத்திலும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு குறிப்பிட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...