விலங்குவதைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு - கோவை காவல் அதிகாரிகள், காவலர்கள் பங்கேற்பு

கோவை மாவட்ட காவல்துறையினருக்கு விலங்குகள் மீதான குற்றத்தடுப்பு மற்றும் விலங்குகள் வதை சட்டம்பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், காவல்துறையைச் சேர்ந்த 35 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் விலங்குகளுக்கு எதிரான குற்றங்கள் மீது எடுக்கப்படும் சட்ட ரீதியான நடைவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்ள கோவை மாவட்ட காவல் துறையினருக்கு



DOGS OF COIMBATORE என்ற தன்னார்வ அமைப்பின் நிறுவனர் கேசிகா ஜெயபாலன் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீனாட்சி, மதுமிதா மற்றும் விலங்கு நல ஆர்வலர் ஆண்டனி ரூபின்குழு உதவியுடன் விலங்குகள் மீதான குற்றம் தடுப்பு மற்றும் விலங்குகள் வதை சட்டம் பற்றி விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், 35 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.



இந்த பயிற்சி வகுப்பை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தொடங்கிவைத்து, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி அவர்களை விலங்கு நல தொடர்பு அதிகாரிகளாகவும் நியமித்தார்.

மேலும், Society for Prevention of Cruelty to Animals என்ற தன்னார்வ நிறுவனத்தின் உதவியுடன் கோவை மாவட்ட காவலர்களுக்கு, மிருகங்கள் சித்திரவதை தொடர்பாக வரும் புகார்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி விளக்கி, 14 சட்ட விதிகள் அடங்கிய போஸ்டர்களை காவல் நிலையத்தில் மக்கள் அறிந்து கொள்ள வேண்டி வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் சிபிஎஸ்பிசிஏ, டாக்டர் கே. சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...