ஓடும் பேருந்தில் பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர் - பல்லடம் காவல்நிலையத்தில் புகார்!

கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பெண்ணிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தகராறில் ஈடுபட்ட இளைஞர் மீது பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

அந்தப் பேருந்து பல்லடம் அருகே வந்தபோது, சூலூரில் இருந்து பயணித்த இளைஞர் ஒருவர், அதே பேருந்தில் பணி முடிந்து கோவை ஒண்டிப்புதூரில் இருந்து வீடு திரும்பிய பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.



இதனால், அந்தப் பெண் பேருந்து ஓட்டுனரிடம் பேருந்தை பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால், பயணிகளோடு அரசு பேருந்து ஓட்டுநர் பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தினார். தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தகராறில் ஈடுபட்ட இளைஞர் மீது அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், அந்த இளைஞரிடம் மகளிர் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென பயணிகளோடு அரசு பேருந்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...