கோவை இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா - பக்தர்கள் சாமி தரிசனம்!

கோவை இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு ஆலயம் வெகு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்த நிலையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: கோவை இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கோவை இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு ஆலயம் வெகு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.



இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவின் துவக்க நிகழ்ச்சியாக சிறப்பு கோ பூஜை நடைபெற்றது. பிறகு நரசிம்ம ஹோமம் நடைபெற்றது. இதில் "ஜெய நரசிம்ஹா ஸ்ரீ நரசிம்ஹா ஜெய ஜெய நரசிம்ஹா" என்ற முழங்கங்களுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து நரசிம்மருக்கு அபிஷேகம் நடைபெற்று நரசிம்மரின் லீலைகள் குறித்த, சொற்பொழிவு, மகா ஆரத்தி மற்றும் பிரசாத விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முடிவில், அனுகல்ப பிரசாதத்தை, நாள் முழுவதும் விரதமிருந்த பக்தர்கள் ஏற்றுக்கொண்டனர்.

மேலும் கோவையின் பல பகுதிகளில் உள்ள ஏழை எளியோருக்கு உதவிடும் வகையில் உணவு விநியோகம் செய்யப்படும் என்று இஸ்கான் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...