கோவை இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா - பக்தர்கள் சாமி தரிசனம்!

கோவை இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு ஆலயம் வெகு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்த நிலையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: கோவை இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கோவை இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு ஆலயம் வெகு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.



இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவின் துவக்க நிகழ்ச்சியாக சிறப்பு கோ பூஜை நடைபெற்றது. பிறகு நரசிம்ம ஹோமம் நடைபெற்றது. இதில் "ஜெய நரசிம்ஹா ஸ்ரீ நரசிம்ஹா ஜெய ஜெய நரசிம்ஹா" என்ற முழங்கங்களுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து நரசிம்மருக்கு அபிஷேகம் நடைபெற்று நரசிம்மரின் லீலைகள் குறித்த, சொற்பொழிவு, மகா ஆரத்தி மற்றும் பிரசாத விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முடிவில், அனுகல்ப பிரசாதத்தை, நாள் முழுவதும் விரதமிருந்த பக்தர்கள் ஏற்றுக்கொண்டனர்.

மேலும் கோவையின் பல பகுதிகளில் உள்ள ஏழை எளியோருக்கு உதவிடும் வகையில் உணவு விநியோகம் செய்யப்படும் என்று இஸ்கான் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...