கோவை இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா - பக்தர்கள் சாமி தரிசனம்!

கோவை இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு ஆலயம் வெகு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்த நிலையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: கோவை இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கோவை இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு ஆலயம் வெகு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.



இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவின் துவக்க நிகழ்ச்சியாக சிறப்பு கோ பூஜை நடைபெற்றது. பிறகு நரசிம்ம ஹோமம் நடைபெற்றது. இதில் "ஜெய நரசிம்ஹா ஸ்ரீ நரசிம்ஹா ஜெய ஜெய நரசிம்ஹா" என்ற முழங்கங்களுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து நரசிம்மருக்கு அபிஷேகம் நடைபெற்று நரசிம்மரின் லீலைகள் குறித்த, சொற்பொழிவு, மகா ஆரத்தி மற்றும் பிரசாத விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முடிவில், அனுகல்ப பிரசாதத்தை, நாள் முழுவதும் விரதமிருந்த பக்தர்கள் ஏற்றுக்கொண்டனர்.

மேலும் கோவையின் பல பகுதிகளில் உள்ள ஏழை எளியோருக்கு உதவிடும் வகையில் உணவு விநியோகம் செய்யப்படும் என்று இஸ்கான் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...