கோவையில் தங்க நகை வியாபாரிகளிடம் பணம் கொள்ளையடித்த வழக்கு - மேலும் 2 பேர் கேரளாவில் கைது!

கோவை க.க.சாவடி அருகே கேரள நகை வியாபாரிகளான ரோகித் மற்றும் பரத் ஆகியோரிடம் ஆயுதத்தைக் காட்டி மிரட்டி ரூ.4.லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த பிரமோத், சுனில் என மேலும் இருவரை தனிப்படை போலீசார் கேரளாவில் கைது செய்துள்ளனர்.


கோவை: கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ரோகித், மற்றும் பரத்.

தங்க நகை வியாபாரிகளான இவர்கள் இருவரும் கடந்த மார்ச் 26 ஆம் தேதி 600 கிராம் தங்கத்தை கோவை ராஜவீதியை சேர்ந்த மொத்த நகை வியாபாரியான நந்த கணேஷ், என்பவரிடம் விற்று விட்டு பணத்தை பெற்றனர். பின்னர் கோவையிலேயே தங்கிவிட்டு மறுநாள் அதிகாலை, தங்களது இருசக்கர வாகனத்தில் கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

க.க.சாவடியில் இருந்து வேலந்தாவளம் ரோட்டில் பிச்சனூர் அருகே செல்லும்போது, கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவரையும் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த ரூ.4 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.

இது தொடர்பாக பரத் க.க.சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் பதுங்கியிருந்த பாலக்காட்டை சேர்ந்த மிதூன் (வயது28), ரஞ்சித்(வயது22) அபினேஸ்(வயது27), ரஞ்சித்குமார்(வயது32) ஆகிய நான்கு பேரை ஞாயிற்றுகிழமை கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள சிலரை தேடி கேரளாவில் முகாமிட்ட தனிப்படை போலீசார், பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாபாறையை சேர்ந்த பிரமோத் (வயது34), சுனில் (வயது46) ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். இருவரையும் கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...