தாராபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தை மாற்றப்பட்டதாக புகார் - பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

தாராபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாகக் கொடுக்கப்பட்ட குழந்தை தங்களுடையது அல்ல என பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையை மருத்துவமனை நிர்வாகம் மாற்றிவிட்டதாக குற்றம்சாட்டிய பெற்றோர், இறந்த குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கருங்காலி வலசு கிராமத்தை சேர்ந்த டிராக்டர் ஓட்டுநரான அபினவ் என்பவரின் மனைவி கீதா பிரசவத்திற்காக நேற்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குழந்தை பிறந்ததை தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தது.



பின்னர் அக்குழந்தையை புதைப்பதற்காக அரசு ஆம்புலன்ஸ் மூலம் சுடுகாட்டிற்கு எடுத்துசெல்லப்பட்ட சிறிது நேரத்தில், குழந்தையை எடுத்து சென்றவர்கள், அதைப் புதைக்காமல் மருத்துவமனைக்கு திரும்பி வந்து மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை மாற்றிவிட்டதாக கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த தாராபுரம் காவல்துறையினர் விசாரணை செய்தபொழுது, பிறந்த குழந்தையை மாற்றிவிட்டதாகவும், உயிரிழந்ததாக கூறப்பட்ட குழந்தைக்கு டி.என்.ஏ.பரிசோதனை செய்யவேண்டும் எனவும் பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...