தாராபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தை மாற்றப்பட்டதாக புகார் - பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

தாராபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாகக் கொடுக்கப்பட்ட குழந்தை தங்களுடையது அல்ல என பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையை மருத்துவமனை நிர்வாகம் மாற்றிவிட்டதாக குற்றம்சாட்டிய பெற்றோர், இறந்த குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கருங்காலி வலசு கிராமத்தை சேர்ந்த டிராக்டர் ஓட்டுநரான அபினவ் என்பவரின் மனைவி கீதா பிரசவத்திற்காக நேற்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குழந்தை பிறந்ததை தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தது.



பின்னர் அக்குழந்தையை புதைப்பதற்காக அரசு ஆம்புலன்ஸ் மூலம் சுடுகாட்டிற்கு எடுத்துசெல்லப்பட்ட சிறிது நேரத்தில், குழந்தையை எடுத்து சென்றவர்கள், அதைப் புதைக்காமல் மருத்துவமனைக்கு திரும்பி வந்து மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை மாற்றிவிட்டதாக கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த தாராபுரம் காவல்துறையினர் விசாரணை செய்தபொழுது, பிறந்த குழந்தையை மாற்றிவிட்டதாகவும், உயிரிழந்ததாக கூறப்பட்ட குழந்தைக்கு டி.என்.ஏ.பரிசோதனை செய்யவேண்டும் எனவும் பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...