அதிமுக நிர்வாகி வீட்டின் முன்பு விவசாயி குடும்பத்துடன் உண்ணாவிரதம் - ரூ.1.10 கோடி பணத்தை திருப்பித் தரக் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடிக்கும் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளரைக் கண்டித்து, அவரது வீட்டின் முன்பு பாதிக்கப்பட்ட விவசாயி தமது குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். விவசாயி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுடைய மகன் தினேஷ் மற்றும் லோகேஸ். இவர்கள் 4 பேர் உள்பட 5 பேர் மூலனூர் நத்தப்பாளையத்தில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் வீட்டின் முன்பு நேற்று அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இது குறித்துப் பேசிய ராமகிருஷ்ணன், “மூலனூரில் கோழி தீவனம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்த உரிமையாளர் தொழில் ரீதியாக என்னிடம் ரூ.1 கோடியே 10 லட்சம் பெற்றுள்ளார்.



ஆனால், அந்த பணத்தை 4 ஆண்டுகள் கடந்தும் திருப்பி கொடுக்கவில்லை. எனவே, குடும்பத்துடன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகிறேன். தரவேண்டிய ரூ.1 கோடியே 10 லட்சத்தை திருப்பி தரும்வரை போராட்டம் தொடரும் என்றார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...