அதிமுக நிர்வாகி வீட்டின் முன்பு விவசாயி குடும்பத்துடன் உண்ணாவிரதம் - ரூ.1.10 கோடி பணத்தை திருப்பித் தரக் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடிக்கும் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளரைக் கண்டித்து, அவரது வீட்டின் முன்பு பாதிக்கப்பட்ட விவசாயி தமது குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். விவசாயி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுடைய மகன் தினேஷ் மற்றும் லோகேஸ். இவர்கள் 4 பேர் உள்பட 5 பேர் மூலனூர் நத்தப்பாளையத்தில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் வீட்டின் முன்பு நேற்று அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இது குறித்துப் பேசிய ராமகிருஷ்ணன், “மூலனூரில் கோழி தீவனம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்த உரிமையாளர் தொழில் ரீதியாக என்னிடம் ரூ.1 கோடியே 10 லட்சம் பெற்றுள்ளார்.



ஆனால், அந்த பணத்தை 4 ஆண்டுகள் கடந்தும் திருப்பி கொடுக்கவில்லை. எனவே, குடும்பத்துடன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகிறேன். தரவேண்டிய ரூ.1 கோடியே 10 லட்சத்தை திருப்பி தரும்வரை போராட்டம் தொடரும் என்றார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...