கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.5,000க்கு விற்பனை - விலை குறைந்ததால் விற்பனை மந்தம்!

கடும் வெப்பம் காரணமாக கன்னிவாடி ஆட்டுச்சந்தையில் கடந்த 2 வாரங்களாக ஆடுகள் விற்பனை குறைவாக இருந்து வந்த நிலையில், இன்றைய தினம் 10 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ.5,000க்கு விலை போனதால், விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனை செய்யாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த கன்னிவாடி ஆட்டுச்சந்தையில் ஆடுகளின் விலை குறைந்ததால், விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்யாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

தமிழ்நாட்டில் நடைபெறும் முக்கிய ஆட்டுச்சந்தைகளில் ஒன்று கன்னிவாடி சந்தை. இந்த சந்தை வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கன்னிவாடி, மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.



அவற்றை வாங்குவதற்கு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, பொள்ளாச்சி, உடுமலை போன்ற நகரங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகிறார்கள். இதனிடையே கடந்த 2 வாரங்களாகவே கடும் வெப்பம் காரணமாக வியாபாரம் குறைந்து காணப்பட்டது.

அதன்படி நடந்த சந்தையில் 3,000 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆடுகளுக்கு விலை குறைந்து இருந்ததால் ஆடுகளை விவசாயிகள் விற்பனை செய்யாமல் திருப்பி கொண்டு சென்றனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...