கோவை தனியார் நிறுவனத் தொழிலாளர் மீது தாக்குதல் - சக தொழிலாளி கைது!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவன தொழிலாளர்கள் இருவர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்தார். இது தொடர்பாக, ஆறுமுகம் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த திருமூர்த்தி மற்றும் ஆறுமுகம் ஆகியோர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வெல்டர்களாக வேலை செய்து வந்துள்ளனர்.

கடந்த மாதம், ஆறுமுகம் கையில் இருந்த சுத்தியல் தவறுதலாக திருமூர்த்தியின் கால் மீது விழுந்துள்ளது. இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆறுமுகத்தை திருமூர்த்தி இரும்பு பைப்பால் காலில் தாக்கியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் வேலைக்கு வந்த ஆறுமுகத்தை, திருமூர்த்தி கால் காயத்தை வைத்து கிண்டல் செய்ததாக தெரிகிறது.

இதில் ,ஆத்திரமடைந்த ஆறுமுகம் அருகில் இருந்த இரும்பு பைப்பால் திருமூர்த்தியில் தலையில் தாக்கியுள்ளார். இதில் திருமூர்த்திக்கு தலையில் தையல்கள் போடப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பாக திருமூர்த்தியின் தாய் அளித்த புகாரின் பேரில், ஆறுமுகத்தை கைது செய்த துடியலூர் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

ஆறுமுகத்தின் மீது ஏற்கனவே வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...