கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் பெரியப்பா கைது!

கோவையில் 10 வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின், அந்த சிறுமியின் பெரியப்பாவை துடியலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையை சேர்ந்த 15 வயது சிறுமி, 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கமாக தனது பெரியப்பா வீட்டிற்கு விடுமுறை நாட்களில் படிக்கச் சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டில் இருந்து 2022 வரை கடந்த 5 ஆண்டுகளாக சிறுமிக்கு பலமுறை, அவரது பெரியப்பா பாலியல் தொல்லையளித்து வந்துள்ளார்.

இது குறித்து வெளியே சொல்ல அச்சப்பட்ட அந்தச் சிறுமி கடந்த சில நாட்களுக்குமுன், தனது தாயிடம் விவரத்தைக் கூறியுள்ளார். அதன்பேரில், தாய் அளித்த புகார் அடிப்படையில், சிறுமியின் பெரியப்பா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த துடியலூர் அனைத்து மகளிர் போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...