3 நாள் தொடர் விடுமுறை - கோவையிலிருந்து சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் செல்ல 50,000 பேர் முன்பதிவு!

சனி, ஞாயிறு மற்றும் மே தினம் ஆகிய 3 நாள் தொடர் விடுமுறை நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், கோவையில் இருந்து அரசு பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்ல 50,000 பேர் முன்பதிவு மற்றும்4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவிப்பு.


கோவை: தொடர் விடுமுறையையொட்டி கோவையில் இருந்து வெளியூர்களுக்கு அரசு பேருந்துகளில் செல்ல 50,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்து நிலையில், கோடை விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது. ஏற்கனவே தனியார் பள்ளி மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வை முடித்துவிட்டு கோடை விடுமுறையில் உள்ளனர்.

அரசு பொதுத் தேர்வை எழுதிய மாணவர்களும் தேர்வு முடிவுக்காக காத்து இருக்கின்ற நிலையில் வெளியூர்களுக்கு பயணத்தை தொடங்கிள்ளனர். கோடை விடுமுறை ஒரு புறமும், அரசு ஊழியர்களுக்கு மே தினத்தையொட்டி (திங்கட்கிழமை) நாளை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.

அதனால் வெளியூர் பயணம் செய்ய மக்கள் பேருந்து, ரயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். அனைத்து ரயில்களும் நிரம்பிவிட்டதால் ஆம்னி பேருந்துகளில் கொள்ளை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆம்னி பேருந்துகளில் ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000 என கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கிறார்கள். இதனால் அரசு பேருந்துகளை நாடி பலரும் வருகிறார்கள். அரசு விரைவு பேருந்துகள் மற்றும் பிற போக்குவரத்து அரசு பேருந்துகள் இந்த 4 நாட்களும் நிரம்பிவிட்டன.

இன்று முதல் மே 1ஆம் தேதி வரை 50,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையிலிருந்து மட்டும் 25 ஆயிரம் பேர் வெளியூருக்கு பயணம் செய்ய முன்பதிவு செய்து உள்ளனர். வெளியூர்களிலிருந்து சென்னை திரும்பவும் ஆயிரக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படும். 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது, மே தினத்தையொட்டி தொடர் அரசு விடுமுறை நாட்கள் வருவதால் அரசு பேருந்துகளில் முன்பதிவு, பண்டிகை காலத்தில் இருப்பது போன்று பதிவாகி உள்ளது. 4 நாட்களுக்கு 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்.

பயணிகள் கூட்டம் இன்று மாலையிலிருந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் 4 நாட்களுக்கும் கூடுதலாக தலா 500 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம்.

அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, புதுவை ஆகிய போக்குவரத்து கழகங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளை விட கட்டணம் பல மடங்கு குறைவாக இருப்பதால் தற்போது அரசு பேருந்துகளில் மக்கள் அதிகளவில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...