கோவை பாலக்காடு சாலையில் 2 லாரிகள் மோதி விபத்து - கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தால் பரபரப்பு

கோவை - கேரளா எல்லையான வாளையார் அருகே டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில், டேங்கர் லாரியில் இருந்த கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து வாளையார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: வாளையார் அருகே லாரிகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திலிருந்து, கோவையில் உள்ள சோடா தயாரிக்கும் நிறுவனத்திற்கு டேங்கர் லாரி மூலம் கார்பன்-டை ஆக்ஸைடு ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி ஒன்று, தமிழக - கேரளா எல்லையான வாளையார் வட்டப்பாரா அருகே வந்தபோது, கோவைக்கு காய்கறி லோடு ஏற்ற வந்த மற்றொரு லாரி, டேங்கர் லாரியின் பின்புறம் மோதியது.



இதில் டேங்கர் லாரியின் வால்வில் உடைப்பு ஏற்பட்டு, உள்ளே இருந்த கார்பன்-டை ஆக்ஸைடு பயங்கர சத்தத்துடன் வெளியேறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த வாளையார் போலீசார் உடனடியாக பாலக்காடு - கோவை நெடுஞ்சாலையில் போக்குவரத்தை முழுமையாக நிறுத்தினர்.

பின்னர் அங்கு வந்த கஞ்சிக்கோடு தீயணைப்புத் துறையினர் கார்பன்-டை ஆக்ஸைடு வெளியேறுவதை தடுக்க தீவிரமாக போராடினர். சுமார் 2 மணி நேரம் போராடி டேங்கர் லாரியில் உடைப்பு ஏற்பட்ட வால்வை தீயணைப்புத் துறையினர் சரி செய்தனர்.

கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் அதிக சத்தத்துடன் கார்பன்-டைஆக்ஸைடு வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து வாளையார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...