கோவை பாலக்காடு சாலையில் 2 லாரிகள் மோதி விபத்து - கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தால் பரபரப்பு

கோவை - கேரளா எல்லையான வாளையார் அருகே டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில், டேங்கர் லாரியில் இருந்த கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து வாளையார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: வாளையார் அருகே லாரிகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திலிருந்து, கோவையில் உள்ள சோடா தயாரிக்கும் நிறுவனத்திற்கு டேங்கர் லாரி மூலம் கார்பன்-டை ஆக்ஸைடு ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி ஒன்று, தமிழக - கேரளா எல்லையான வாளையார் வட்டப்பாரா அருகே வந்தபோது, கோவைக்கு காய்கறி லோடு ஏற்ற வந்த மற்றொரு லாரி, டேங்கர் லாரியின் பின்புறம் மோதியது.



இதில் டேங்கர் லாரியின் வால்வில் உடைப்பு ஏற்பட்டு, உள்ளே இருந்த கார்பன்-டை ஆக்ஸைடு பயங்கர சத்தத்துடன் வெளியேறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த வாளையார் போலீசார் உடனடியாக பாலக்காடு - கோவை நெடுஞ்சாலையில் போக்குவரத்தை முழுமையாக நிறுத்தினர்.

பின்னர் அங்கு வந்த கஞ்சிக்கோடு தீயணைப்புத் துறையினர் கார்பன்-டை ஆக்ஸைடு வெளியேறுவதை தடுக்க தீவிரமாக போராடினர். சுமார் 2 மணி நேரம் போராடி டேங்கர் லாரியில் உடைப்பு ஏற்பட்ட வால்வை தீயணைப்புத் துறையினர் சரி செய்தனர்.

கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் அதிக சத்தத்துடன் கார்பன்-டைஆக்ஸைடு வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து வாளையார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...