கோவையில் வீட்டு வசதி வாரிய திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திடீர் ஆய்வு!

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாவட்டத்தில் வீட்டு வசதி வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டார்.



கோவையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, காடம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி மையம் ஆகியவை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



வெள்ளக்கிணறு கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் 1,006 மனைகள் மேம்பாட்டு திட்டம் 50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருவதையும், பெரியநாயக்கன் பாளையத்தில் சுமார் 10.81 ஏக்கர் பரப்பளவில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவுக்காக 152.87 கோடி மதிப்பில் 1800 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வீட்டுவசதி வாரியத்தின் கோயம்புத்தூர் பிரிவு அலுவலகத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விரைந்து பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து வெள்ளக்கிணறு கிராமத்தில் வீட்டுவசதி துறையின் மூலம் மனை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வீட்டு மனைகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

பின்னர் அப்பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், பயனாளிகள் தேர்வு குறித்தும், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், குறைந்த வருவாய் பிரிவினர், நடுத்தர வருவாய் பிரிவினர், உயர் வருவாய் பிரிவினர் ஆகிய நான்கு பிரிவுகளின் ஒதுக்கீடு செய்யப்படும் வீட்டுமனை பிரிவுகளின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.



அதனை தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவுக்காக ரூ.152.17 கோடி மதிப்பில் 500 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.



பின்னர், கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு மையத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினை பரிசோதனை செய்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...