கோவை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்

கோவையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தை ஏழு கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.



கோவை: கோவையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கம் பல மாதங்களாக புதுப்பிக்கப்படாமல் இருந்த நிலையில் அதனை புதுப்பித்து தர பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வருகை புரிந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 7 கோடி ரூபாய் மதிப்பில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தை புதுப்பிக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.



அதன்படி, பழைய ஓடுதள பாதைகள் அனைத்தும் பெயர்த்து எடுக்கப்பட்டு சிந்தடிக் ஓடுதளம் அமைக்கப்பட உள்ளது. மேலும் இங்கு மழை நீர் வடிகால் புதுபிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.



தற்போது இந்த புதுப்பிக்கும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பழைய ஓடுதள பாதைகள் அனைத்தும் அகற்றப்பட்டு சிந்தடிக்ஓடுதள பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை தரமாகவும் விரைந்தும் முடித்து தர வேண்டுமென விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...