கோவை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்

கோவையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தை ஏழு கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.



கோவை: கோவையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கம் பல மாதங்களாக புதுப்பிக்கப்படாமல் இருந்த நிலையில் அதனை புதுப்பித்து தர பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வருகை புரிந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 7 கோடி ரூபாய் மதிப்பில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தை புதுப்பிக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.



அதன்படி, பழைய ஓடுதள பாதைகள் அனைத்தும் பெயர்த்து எடுக்கப்பட்டு சிந்தடிக் ஓடுதளம் அமைக்கப்பட உள்ளது. மேலும் இங்கு மழை நீர் வடிகால் புதுபிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.



தற்போது இந்த புதுப்பிக்கும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பழைய ஓடுதள பாதைகள் அனைத்தும் அகற்றப்பட்டு சிந்தடிக்ஓடுதள பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை தரமாகவும் விரைந்தும் முடித்து தர வேண்டுமென விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...