பொள்ளாச்சி அருகே தொடர் செயின் பறிப்பு - 13 சவரன் நகையுடன் தூத்துக்குடிப் பெண் கைது!

பொள்ளாச்சி அருகே கோட்டூர் பகுதியில் 3 பெண்களிடம் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கௌதமி என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 13 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.



பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்துள்ள கோட்டூர் பகுதியில் கடந்த மாதம் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது, சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் நகை பறிப்பில் ஈடுபட்டனர். கோட்டூர் பகுதியை சேர்ந்த பழனியம்மாள் சிவபாக்கியம் மற்றும் துளசி அம்மாள் ஆகிய மூன்று பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் 13 சவரன் நகையை கொள்ளை அடித்து சென்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கி என்பவரது மனைவி கௌதமி (வயது 36) என்பவர் இந்த தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர் விசாரணையில், கௌதமி, மேலும் பல திருட்டு குற்றங்களில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட கௌதமிடமிருந்து 13 சவரன் நகையை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...