10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிய உடுமலை பாமகவினர்!

திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினர் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்ற கோரி உடுமலை தலைமை தபால் நிலையத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதியரசர்களுக்கு திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் இரா.பழனிச்சாமி தலைமையில் கடிதங்கள் அனுப்பப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி பாமக சார்பில் முதல்வர் மற்றும் நீதியரசர்களுக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது.

திருப்பூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில் சுமார் 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் நீதி அரசர்களுக்கு தபால் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.



இந்நிலையில் உடுமலை தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற கடிதம் அனுப்பும் நிகழ்வில் திருப்பூர் மேற்கு மாவட்ட மாவட்ட தலைவர் கு.சிங்காரவேலு, மாவட்ட உழவர் பேரியக்க செயலாளர் அ.பழனிச்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மின்னல் செந்தில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் முத்தமிழ் செல்வி, மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி, உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் ப.சிவபாலு தளிபேரூராட்சி செயலாளர் ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...