உடுமலையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - இருவர் போக்சோவில் கைது!

மடத்துக்குளம் அடுத்த நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறியும், மிரட்டியும் பாலியல் வன்கொடுமை செய்து 4 மாத கர்ப்பமாக்கிய வீரமுத்து (23) மற்றும் தங்கராஜ் (29) ஆகியோரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்


திருப்பூர்: மடத்துக்குளம் அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 2 இளைஞர்களை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த நரசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து (23). ஓட்டுனராக பணியாற்றி வரும், இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

பத்தாம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட வீரமுத்து, சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

இதனிடையே இவர்களுக்கு இடையேயான தொடர்பு அவரது அக்கா கணவரான உடுமலை அடுத்த சர்க்கார்புதூரைச் சேர்ந்த தங்கராஜ்(29) என்பவருக்கு தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து தங்கராஜ் அவர்கள் இருவருக்குமான உறவை வெளியில் சொல்லி விடுவேன் என்று மிரட்டி அந்த பெண்ணை பாலியல் உறவுக்கு உட்படுத்தி உள்ளார்.

இருவரும் மாறி மாறி சிறுமியை பாலியல் உறவுக்கு உட்படுத்தியதில் அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த சிறுமி பரிசோதனை மேற்கொண்டதில் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து தனது காதலனான வீரமுத்துவை சந்தித்து திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி கேட்டு உள்ளார். அதற்கு அவர் உனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் தகப்பன் அல்ல உனது அக்கா வீட்டுக்காரரை போய் கேள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.



இதனால் மனமுடைந்த சிறுமி உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதாவிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், வீரமுத்து மற்றும் தங்கராஜ் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆசை வார்த்தை கூறி காதலனும் உறவை தெரிந்து கொண்ட அக்கா வீட்டுக்காரரும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மடத்துக்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...