பன்றிக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை கோரி முகமூடி அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்

மக்கள் குறை தீர்ப்பு முகாமில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முகமூடி அணிந்து மனு அளிக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக கோவையில் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலால் ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பலர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்த பன்றி காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

மேலும், காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைக்கு வருபவர்களை விரைவாக சோதனை செய்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த வாலிபர் சங்கத்தினர் முகமூடி அணிந்து வந்ததால் அப்பகுதீயில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...