பல்லடத்தில் ஆதரவற்ற முதியவருக்கு உதவிய பாஜக நிர்வாகிகளுக்கு குவியும் பாராட்டு!

பல்லடம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் கிடந்த 76 வயது முதியவருக்கு முகச்சவரம் செய்து, குளிப்பாட்டி, உணவளித்து, ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்ட பாஜக நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.



திருப்பூர்: பல்லடத்தில் ஆதரவற்ற முதியவருக்கு உதவிய பாஜக நிர்வாகிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் நடக்க முடியாத நிலையில் கடந்த 9 நாட்களாக ஆதரவற்று படுத்து கிடந்துள்ளார்.

இந்நிலையில், இன்று பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு துறை மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ஆகியோர் அந்த முதியவரிடம் விசாரித்ததில் அவர் சென்னையை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பது தெரியவந்தது.

மேலும், அவரை அவரது உறவினர்கள் பல்லடத்தில் விட்டு விட்டு சென்றதாகவும், ஒன்பது நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உதவ ஆளில்லாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.



இந்நிலையில் பாஜக நிர்வாகிகள் இருவரும் அந்த முதியவருக்கு முகச் சவரம் செய்து, குளிப்பாட்டி புது துணிகளை வழங்கி அவருக்கு உணவு அளித்தனர். மேலும் ஆதரவற்ற நிலையில் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பின்றி தங்கியுள்ள முதியவர் ஜாகிர் உசேனை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஒன்பது நாட்களாக உதவ ஆளில்லாமல் தவித்து வந்த முதியவர் பாஜக நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்தார். மனிதநேயத்தோடு செயல்பட்டு முதியவருக்கு உதவிய பாஜக நிர்வாகிகளின் இச்செயல் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...