கோவை மாநகர பெண் காவலர்களுக்கான கைப்பந்து மற்றும் கபடி போட்டி - மாநகர காவல் ஆணையர் துவங்கி வைத்தார்!

தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் காவலர்களாக பணியில் சேர்ந்து, 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி கோவை மாநகர காவல்துறை சார்பில் பெண் காவலர்களுக்கான கைப்பந்து மற்றும் கபடி போட்டிகளை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில் பெண் காவலர்களுக்கான கைப்பந்து மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது.

காவல்துறையில் பெண்கள் காவலர்களாக சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி கோவை மாநகரில் பெண் காவலர்களுக்கு பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் படி பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று மாநகர பெண் காவலர்களுக்கான கைப்பந்து மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது.



இதில் ஆய்வாளர் தெய்வமணி தலைமையில் Thunder Girls என்ற அணியும், ஆய்வாளர் தெளலத் நிஷா தலைமையில் Fire என்ற அணியும் மோதின. இதனை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த போட்டிகள் ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர் மேற்பார்வையில் நடைபெற்றது.



இதில் மாநகர காவல் தலைமை அலுவலக ஆணையாளர் சுகாசினி உட்பட பல்வேறு காவலர்கள் பங்கேற்று விளையாட்டை கண்டுகளித்தனர்.

Newsletter

நினைத்ததை சாதிக்கும் செயல்வீரர் செந்திலபாலாஜி - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கோவையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மின்துறை அம...

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...