ஊத்துக்குளி அருகே தாய், தந்தையை அடித்து கொலை செய்த மகன் - பரபரப்பு!

ஊத்துக்குளி அருகே கிருஷ்ணமூர்த்தி - ரேணுகாதேவி தம்பதியின் மகன் கார்த்தி, நேற்றிரவு தனது தாய், தந்தையை இரும்பு குழாயால் அடித்து கொலை செய்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளியான கார்த்தி மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தாய், தந்தையை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி - ரேணுகாதேவி தம்பதி. இவர்களுக்கு 21 வயதில் கார்த்திக் என்ற மகன் உள்ளார். கார்த்திக் ஜெ.சி.பி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.



இந்நிலையில் இன்று காலை கிணற்றுக்குள் இருந்து கார்த்தி கூச்சல் சத்தம் கேட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது, நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் தனது தாய் மற்றும் தந்தையை தாக்கிவிட்டு ஜே.சி.பி பேட்டரிகளை திருட முயன்றதாகவும், அதனை தடுக்க முயன்ற தன்னை, கிணற்றுக்குள் தள்ளி விட்டு சென்றதாக கூறியுள்ளார்.



இதனையடுத்து, வீட்டிற்கு சென்று பார்த்தபோது ரேணுகாதேவி பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையிலும், கிருஷ்ணமூர்த்தி படுகாயங்களுடன் இருந்துள்ளனர். பின்னர் உடனடியாக கிருஷ்ணமூர்த்தி மற்றும் கார்த்திக் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர், மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து ஊத்துக்குளி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்தி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், அவரே இரும்பு குழாயால் தனது தாய், தந்தையை அடித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மனநிலை பாதிக்கப்பட்ட மகன், தாய், தந்தை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...