உடுமலை அமராவதி அணையை தூர்வாருவதில் நடப்பாண்டிலும் சிக்கல் - அதிகாரிகள் தகவல்!

உடுமலையில் உள்ள அமராவதி அணை கடந்த 64 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால், மொத்த கொள்ளளவில் 15 - 20 சதவீதம் மணல் மற்றும் வண்டல் மண் தேங்கியுள்ளது. 54 அடிக்கும் மேல் தண்ணீர் இருப்பு காரணமாக இந்தாண்டும் தூர்வாருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அமராவதி அணையில் நீர் மட்டம் அதிகரிப்பின் காரணமாக இந்தாண்டும் தூர்வாரும் பணி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை 1958 ஆம் ஆண்டு கட்டப்பட்டு 1959 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. அமராவதி அணையானது, 4 டி.எம்.சி. கொள்ளளவும், ஆண்டுக்கு 10 டி.எம்.சி நீர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.



இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் மூன்று போகமும் நெல் சாகுபடியும், புதிய ஆயகட்டு பாசன நிலத்தில் கரும்பு, தென்னை, காய்கறி, தானிய வகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன .

இந்நிலையில், அமராவதி அணை கடந்த 64 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் மொத்த நீர் தேங்கும் பரப்பில் 15 முதல் 20 சதவீதம் வரை மணல் மற்றும் வண்டல் மண் தேங்கியுள்ளது. இவற்றை முறையாக அகற்றி தூர் வாரினால் 800 மில்லியன் கன அடி நீர் திறக்க முடியும்.

மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை பாசன நிலங்களுக்கு கூடுதலாக வழங்கவும் அணையை தூர்வார வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக பட்ஜெட்டில் அமராவதி அணை தூர்வாரப்பட்டு பழைய கொள்ளளவு நிலைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது.

அணை தூர்வாரப்பட்டால் எடுக்கப்படும் மணல் வண்டல் மண் வாயிலாக அரசுக்கு வருவாய் கிடைக்கும். விளை நிலங்களில் மண்வளம் பெருகும். கடந்த மூன்று ஆண்டுகளாக பருவமழைகள் திருப்தியாக பெய்து அணை நீர்மட்டம் குறையாத காரணத்தால் தூர்வாரப்படவில்லை.

தற்சமயம் அமராவதி அணை மொத்த 90 அடியில் 54.50 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் நடப்பு ஆண்டும் தூர்வாரும் பணிக்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,

ஒவ்வொரு ஆண்டும் திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பி வைக்கப்படுகின்றது. 25 அடிக்கும் குறைவாக ஏப்ரல் மாதத்தில் நீர் இருப்பு இருந்தால் மட்டும் தூர்வார முடியும். நிதி தயாராக இருந்தாலும் நீர் இருக்கும் உள்ளதால் இப்பணி துவங்க முடியவில்லை, என்றனர்.

Newsletter

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...