கோவை தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா - பக்தர்கள் திருவிளக்கு பூஜை வழிபாடு

கோவையில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா, கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.



தினந்தோறும் அம்மனுக்கு மகா கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில் இன்று பக்தர்களின் திருவிளக்கு பூஜை வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது.



300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.



தொடர்ந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வரும் நாட்களில் அம்மன் திருக்கல்யாண உற்சவம், மஞ்சள் நீர், சக்தி கரகம், அக்னி தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி என வரும் 30ஆம் தேதியுடன் தண்டுமாரியம்மன் சித்திரை திருவிழா முடிவடைகிறது.

Newsletter

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...