கோவையில் டாடா நிறுவனம் சார்பில் மின்சார வாகனங்களுக்கான பவர் சார்ஜிங் மையங்கள் அமைக்க ஒப்பந்தம்!

கோவை மாநகராட்சியில் ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் POWER FAST CHARGING STATION அமைக்க கோவை மாநகராட்சி மற்றும் டாடா பவர் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ 20 இடங்களில்‌ அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங்‌ செய்யும் நிலையங்கள்‌ அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்தாகியுள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக‌ கூட்டரங்கில்‌ கோவை‌ மாநகராட்சி மற்றும்‌ டாடா பவர்‌ நிறுவனம் இணைந்து கோவை மாநகரில்‌ 20 இடங்களில்‌ அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங்‌ நிலையங்கள்‌ அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வானது, மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப் மற்றும் டாடா பவர்‌ நிறுவன விற்பனை தலைவா்‌ வீரேந்திர கோயல்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌ மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாநகராட்சியில்‌ பெருகி வரும்‌ மின்சார வாகனங்களால்‌ சுற்றுச்சூழலுக்கும்‌, பொதுமக்களுக்கும்‌ பல நன்மைகள்‌ ஏற்படுகிறது. இதனை மேலும்‌ அதிகரிக்கும்‌ நோக்கத்தோடு கோவை மாநகராட்சியில்‌ 20 இடங்களில்‌ சார்ஜிங்‌ நிலையங்கள்‌ அமைப்பது அவசியமாகிறது.

இதனை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு மற்றும்‌ தமிழ்நாடு அரசின்‌ வழிகாட்டுதலின்படி, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி நார்வாகம்‌ மற்றும்‌ டாடா பவர்‌ நிறுவனம் மும்பை ஒருங்கிணைந்து சார்ஜிங்‌ நிலையங்கள்‌ அமைக்க திட்டமிட்டுள்ளது.

சார்ஜிங்‌ நிலையங்களில்‌ TATA POWER EZ CHARGE Application வழியாக சார்ஜிங்‌ நிலையங்களை கண்டறிதல்‌, மின்சார வாகனங்களுக்கு சார்ஜ்‌ செய்தல்‌, அதற்கான கட்டணங்களை செலுத்துதல்‌ உள்ளிட்டவை TATA POWER EZ CHARGE Application வழியாக மேற்கொள்ளப்படுகிறது. ஒரு வாகனத்திற்கு 60 நிமிடத்தில்‌ 80% வரை சார்ஜிங்‌ செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில்‌ கீழ்கண்ட 20 இடங்களில்‌ சார்ஜிங்‌ நிலையங்கள்‌ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ 4 இடங்கள்‌, அவினாசி சாலை வ.உ.சி. பூங்கா பகுதியில்‌ 2 இடங்கள்‌, வாலாங்குளம்‌ பகுதியில்‌ 2 இடங்கள்‌, பெரியகுளம்‌ பகுதியில்‌ 1 இடம்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதியில்‌ 3 இடங்கள்‌,

சரவணம்பட்டியில்‌ 1 இடம்‌, புரூக்‌ பீல்ட்ஸ்‌ அருகே மாநகராட்சி வானக நிறுத்துமிடம்‌ 1, சிங்காநல்லாரில்‌ 1 இடம்‌, அவினாசி சாலை டைடல்‌ பாரக்‌ அருகே 1 இடம்‌, காந்திபுரம்‌ கிராஸ்கட்‌ சாலை அருகே 1 இடம்‌, காளப்பட்டி சாலையில்‌ 2 இடங்கள்‌, துடியலாரில்‌ 1 இடம்‌ ஆகிய 20 இடங்கள்‌ ஆகும்‌.

இந்நிகழ்வில்‌ டாடா பவர்‌ நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர்‌ அர்விந்த்‌ சுப்பிரமணியன்‌, டாடா பவர்‌ கம்பெனி லிட்‌, சேனல்‌ பார்ட்னர்‌ தமிழ்நாடு கோகுல கண்ணன்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...