கிணத்துக்கடவு அருகே பாறைக்குழியில் குதித்து 2 பேர் தற்கொலை!

கிணத்துக்கடவு அருகே ஏலூரில் உள்ள பாறைக்குழியில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விசாரணையில், இருவரும் சாணிப்பவுடன் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஏலூரில் பாறை குழியில் அதிகளவில் தண்ணீர் தேங்கி உள்ளது.



இந்த பாறைக்குழியில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உடல் தண்ணீரில் மிதப்பதாக அந்த பகுதி மக்கள் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.



தகவல் அறிந்து வந்த கிணத்துக்கடவு போலீசார் உடனடியாக கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் இருந்து மிதந்து கிடந்த இரண்டு உடல்களையும் கயிறு கட்டி மீட்டனர்.



உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இருவரும் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த ஆணின் வயது 60 ஆகவும், பெண்ணின் வயது 50 வயது ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...