விஷூ பண்டிகைக்கு 14 டன் காய்கறிகள் - கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு விமானத்தில் ஏற்றுமதி

கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு விமான மூலம் கடந்த ஒரு வாரத்தில் 14 டன் காய்கறிகள் விஷூ பண்டிகை கொண்டாட்டத்திற்காக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறையையொட்டி, உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் 3 டன் எடையிலான சரக்குகள் இந்த விமானத்தில் கொண்டு செல்லப்படுவது வழக்கம். மலையாளிகளின் புத்தாண்டான விஷூ முன்னிட்டு கடந்த ஒரு வாரத்தில் காய்கறிகள் மட்டுமே அதிக எடையளவு கையாளப்பட்டுள்ளன.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில்,

மலையாள புத்தாண்டை முன்னிட்டு கடந்த 7 நாட்களில் கோவையிலிருந்து வழங்கப்பட்ட 5 விமான சேவையில் மொத்தம் 15 டன் எடையிலான சரக்குகள் கோவையிலிருந்து சார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இவற்றில் 14 டன் எடையிலான சரக்குகள் காய்கறிகள்.

கோவக்காய், வாழைக்காய், பீன்ஸ், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவை தவிர்த்து 1 டன் எடையிலான மாங்காய் மற்றும் ரோஜாப்பூ, சூரியகாந்திப்பூ உள்ளிட்ட மலர்களும் புக்கிங் செய்யப்பட்டு, விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும், கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது தினமும் 25 விமானங்கள் இயக்கப்பட்டுவரும் நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை கால விடுமுறை தொடங்கியுள்ளதால், எதிர்வரும் நாட்களில் விமான சேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...