தாராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி - போலீசார் விசாரணை

தாராபுரம் அருகே விவசாய நிலத்தில் புதிதாக வெட்டப்பட்டு வந்த கிணற்றில், கரூர் அருகே ஆனைகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்துள்ள நந்தவனம்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வரன். இவர் தனது தோட்டத்தில் புதிதாக கிணறு அமைத்து வருகிறார்.

கிணறு வெட்டும்பணியில் காணிக்கம்பட்டி கரூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், சில தொழிலாளர்கள் கிணற்றின் அருகிலேயே கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலையில் கூடாரத்தில் தங்கியிருந்த கரூர், பாளையம் அருகே உள்ள ஆனைகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (வயது 45), என்பவரைக் காணவில்லை.

அக்கம் பக்கத்தில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், சந்தேகமடைந்து 70அடி ஆழமுள்ள கிணற்றில் தேங்கியிருந்த தண்ணீரை அப்புறப்படுத்தி பார்த்தனர். அப்போது இறந்த நிலையில் பெருமாள் கிணற்றில் சடலமாகக் கிடந்தார்.

இது குறித்து குண்டடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்புதுறையினர் மூலம் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அதில், தொழிலாளி பெருமாள் இரவில் தவறுதலாக கிணற்றுப் பக்கம் சென்று தவறி விழுந்தது இறந்தது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...