பல்லடத்தில் பிரம்மாண்ட ஆர்.எஸ்.எஸ். பேரணி - பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பாதுகாப்புக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர்: பல்லடத்தில் ஆர்எஸ்எஸ் பேரணியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

தமிழகத்தில் 45 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணி தலைமையில் பேரணி நடைபெற்றது.



அதன் ஒரு பகுதியாக, பல்லடத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.



வடுகபாளையம் பகுதியில் இருந்து ஸ்ரீநகர் வழியாக கொசவம்பாளையம் சாலை பிரிவு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வரை பேரணி நடைபெற்றது.



மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற இந்தப் பேரணியில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணியினர் கலந்துகொண்டனர்.



இதைத் தொடர்ந்து, கொசவம்பாளையம் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இந்தப் பேரணியையொட்டி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் இதுபோன்ற பேரணிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு, அம்பேத்கர் ஜெயந்தி விழா, தமிழ் வருடப்பிறப்பு, வீரசிவாஜியின் 350வது பிறந்தநாள், வள்ளலாரின் 200 வது பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிறுத்தியும், பொதுமக்களுக்கு ஆர்.எஸ்.எஸ்-ன் சுயசார்பு இந்தியாவை கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த பேரணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நினைத்ததை சாதிக்கும் செயல்வீரர் செந்திலபாலாஜி - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கோவையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மின்துறை அம...

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...