கோவை பொள்ளாச்சி நகராட்சியில் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆய்வு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாக குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா, நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார்.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.



பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு வரும் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட், மற்றும் பாதாள சாக்கடை திட்ட சுத்தகரிப்பு நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.



அப்போது பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



மேலும் பொள்ளாச்சி நகராட்சியை முன்மாதிரியான நகராட்சியாக கொண்டு வர செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை தயார் செய்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது பொள்ளாச்சி நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டுமான பணிகள் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

மேலும் பொள்ளாச்சி நகராட்சியை மேம்படுத்த தேவையான திட்டங்கள் குறித்து அறிக்கை வழங்கி பொள்ளாச்சி நகராட்சியை சிறந்த நகராட்சியாக மாற்றியமைக்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...