விஷூ பண்டிகை கொண்டாட்டம் - கோவை சித்தாபுதூர் ஐயப்பன் ஆலயத்தில் சிறப்பு பூஜை

மலையாள வருட பிறப்பான விஷு தினத்தை முன்னிட்டு கோவையில் புகழ்பெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் கோயில் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மூலவர் ஐயப்ப சாமிக்கு கொன்றை பூக்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது. ஆலயத்திற்கு வந்த மக்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.


கோவை: சித்தாபுதூர் ஐயப்பன் ஆலயத்தில் மலையாள வருட பிறப்பான விஷு தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கேரளாவில் உள்ள மக்கள் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தீபாவளியை பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவது போல், மலையாள புத்தாண்டை பட்டாசுகள் வெடித்தும், வானவேடிக்கைகள் வைத்தும் சிறப்பாக வரவேற்பது வழக்கம்.

மேலும் வீடுகளில் முன்தினம் இரவே பழங்கள், பூக்களால் தங்களது பூஜை அறையை அலங்கரித்து காய்கறிகள், நவதானியங்கள், மற்றும் ஆபரணங்கள் அனைத்தும் வைத்து தயார் நிலையில் வைத்திருப்பார்கள்.

அதிகாலையில் வீட்டில் உள்ள குழந்தைகளின் கண்களை கட்டியப்படி அழைத்து வந்து அலங்கரிக்கப்பட்ட பூஜை அறையை முதலில் பார்த்து எழுவதுபோல் தரிசனம் மேற்கொள்ள வைத்து புதிய வருடத்தில் வாழ்க்கை இனிமையாக அமையப் பழங்களையும், வாழ்வில் அனைத்து செல்வங்களும் நிறைய வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு வைத்து பணம் வைத்து விஷு கை நீட்டம் கொடுப்பதை பாரம்பரியமாக செய்து வருகிறார்கள்.

இதையே கோவையில் வாழும் மலையாள மொழி பேசும் மக்களும் பாரம்பரியம் மாறாமல் மலையாள வருடப்பிறப்பை உற்சாகமாக வரவேற்பர்.



இந்த பண்டிகையையொட்டி, கோவையில் புகழ்பெற்ற சித்தாபுதூர் ஆலயம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.



மூலவர் ஐயப்ப சாமிக்கு கொன்றை பூக்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது.



மேலும் ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் பூசாரிகள் சாமி சிலைகள் முன்பு வைத்துப் பூஜிக்கப்பட்ட நாணயங்களை வழங்கினார்கள்.



பக்தர்களும் தங்களது குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் நின்று சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...