திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல்..! - கோவையில் எம்எல்ஏ எஸ்பி வேலுமணி குற்றச்சாட்டு

கோவை குனியமுத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ.வுமான எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல் நிறைந்துள்ளது என்றார்.



கோவை: குனியமுத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.



கோவை குனியமுத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல் எடப்பாடியார் உத்தரவுக்கு இணங்க பல்வேறு இடங்களில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த வேலைகளும் நடைபெறவில்லை. அத்திக்கிடவு-அவிநாசி திட்டம், பாலங்கள், சாலைகள் போன்ற திட்டங்கள் அனைத்தும் மெதுவாக நடைபெறுகிறது.

கோவைக்கு புதியதாக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல் தான் நடைபெறுகிறது. இதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

கோவையில் ஒரு லோடு மண் எடுப்பதற்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை லஞ்சமாக வாங்குகின்றனர். மாநகராட்சி, தாலுகா அலுவலகம் உட்பட அனைத்து அலுவலகங்களிலும் லஞ்சம் இருக்கிறது. திமுகவினர் எல்லா இடங்களிலும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றனர்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மக்களுக்காக பல்வேறு பிரச்னைகளை கொண்டு வருகிறார். அவை எல்லாம் வெளியில் தெரிவதில்லை. திமுகவை ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கின்றன. ஊடகங்கள் கைவிட்டு விட்டால் திமுக விழுந்து விடும்

ஐபிஎல் போட்டிகளை பொறுத்த வரை கிரிக்கெட் போர்டில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 300, 400 டிக்கெட் கொடுக்கப்பட்டிருப்பதாக கேள்விபட்டோம். அந்த நேரத்தில் இந்த கேள்வியை கேட்டால் சரியாக இருக்கும் என்பதால் அந்தக் கேள்வி கேட்கப்பட்டது.

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுகாகவே கேட்கப்பட்டது. அதற்கு விளையாட்டு துறையிலிருந்து பதில் சொல்லிவிட்டார்கள். அதற்கு பின்பு சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைய பேருக்கு வாய்ப்பு வந்து அவர்கள் போய் போட்டி பார்த்திருக்கிறார்கள்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...