பல்லடம் அருகே குப்பைகளுக்கு தீவைத்த ஊராட்சி நிர்வாகம் - கரும்புகையால் வாகன ஓட்டிகள் அவதி!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரம் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ குப்பைகளுக்கு ஊராட்சி ஊழியர்கள் தீ வைத்தனர். இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர் என்ற இடத்தில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே பல்லடம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாதக்கணக்காக குப்பைகளை கொட்டி மாதத்திற்கு ஒரு முறை தீ வைப்பது வாடிக்கை.

இந்நிலையில், முப்பது நாட்களுக்கும் மேலாக கொட்டி வைக்கப்பட்டிருந்த மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள்,துணி கழிவுகள் என சுமார் இரண்டு டன் அளவுக்குகுவிக்கப்பட்டிருந்த குப்பைகளுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தீவைக்கப்பட்டது.



3 மணி நேரத்துக்கு மேலாக குப்பையில் தீ பற்றியெரிந்தது. இதனால், அதிலிருந்து வெளியேறிய அளவுக்கதிமான கரும்புகை வெளியேறியது. இதனால், அப்பகுதியே புகை மூட்டமாகக் காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகினர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள், குப்பைக்கு வைக்கப்பட்டிருந்த தீயினை தண்ணீரை அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே குவிக்கப்பட்டிருந்த குப்பைகளுக்கு ஊராட்சி நிர்வாகம் தீவைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...