குவாலிட்டி மேனேஜர் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு - கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் காலியாகவுள்ள குவாலிட்டி மேனேஜர் (Quality Manager)பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏப்.21ம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் காலியாக உள்ள குவாலிட்டி மேனேஜ்ர் பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவை, சிங்காநல்லூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ESI (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி) மருத்துவமனையில் குவாலிட்டி (Quality Manager) பணியிடம் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில். தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறுத்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பணி குறித்தான விரிவான விபரங்களை கோவை மாவட்ட Coimbatore.nic.in இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதியான நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 21.04.2023 அன்று மாலை 5 மணிக்குள், முதல்வர்,அரசு மருத்துவகல்லூரி மற்றும் தொ.அ.ஈ.மருத்துவமனை, கோயமுத்தூர்-641015 அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்.

மேற்படி பணிகளுக்கான நேர்முகத்தேர்வு 24.04.2023- ம் தேதி 10 மணிக்கு கோவை, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...