குவாலிட்டி மேனேஜர் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு - கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் காலியாகவுள்ள குவாலிட்டி மேனேஜர் (Quality Manager)பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏப்.21ம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் காலியாக உள்ள குவாலிட்டி மேனேஜ்ர் பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவை, சிங்காநல்லூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ESI (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி) மருத்துவமனையில் குவாலிட்டி (Quality Manager) பணியிடம் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில். தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறுத்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பணி குறித்தான விரிவான விபரங்களை கோவை மாவட்ட Coimbatore.nic.in இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதியான நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 21.04.2023 அன்று மாலை 5 மணிக்குள், முதல்வர்,அரசு மருத்துவகல்லூரி மற்றும் தொ.அ.ஈ.மருத்துவமனை, கோயமுத்தூர்-641015 அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்.

மேற்படி பணிகளுக்கான நேர்முகத்தேர்வு 24.04.2023- ம் தேதி 10 மணிக்கு கோவை, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...