தாராபுரம் அருகே சாலையோர குப்பைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் - பரபரப்பு!

தாராபுரம் அருகே உள்ள ஐந்து சாலை பகுதியில் இருந்த குப்பைகள் தீப்பிடித்து எரிந்த நிலையில் தாராபுரம் தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் குப்பைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே சாலையோர குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐந்து சாலை சந்திப்பு அருகிலுள்ள கரூர் சாலையில் அமராவதி ஆற்றங்கரையில் ஈஸ்வரன் கோயில் உள்ளது. இந்த பகுதி வழியாக தினந்தோறும் சுமார் ஒரு நாளைக்கு 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது.

இந்நிலையில் தாராபுரத்தில் வாழும் பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தப்படும் குப்பை கழிவுகள் மற்றும் தாராபுரத்தில் இயங்கும் உணவகங்கள், இறைச்சி கடைகள் பல்வேறு வியாபார கடைகளில் குப்பை கழிவுகளை தினமும் சாலையோரம் கொட்டி விட்டு செல்கிறார்கள்.

வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் இந்த குப்பைகள் இயற்கையாகவே தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. மேலும் இந்த சாலையில் 2 மதுபான கடைகள் இருப்பதால் இரவு நேரங்களில் அங்கே அமர்ந்து மது குடிக்கும் சமூக விரோதிகள் தீ வைத்துவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் அந்த குப்பைகளில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதில் குப்பைகள் கொழுந்து விட்டு எரிந்தது.



இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



தாராபுரத்தில் சாலை ஓரங்களில் அடிக்கடி இது போன்று நடைபெறுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மாசடைந்த காற்றை சுவாசிப்பதன் மூலம் நோய் தொற்று உருவாகுவதால் மேலும் இது போல் நடக்காமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...