கோவையில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

கோவையில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களில் 500 குழந்தைகள் கண்டறிப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பள்ளிக் கல்விப் பணி இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையைக் கண்டறியும் பணி கடந்த 4 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கணக்கெடுப்பில் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது,

கோவை உட்பட 15 மாவட்டங்களில் பள்ளி செல்லாத குழந்தைகளின் கணக்கெடுக்கும் பணி முழுவீச்சில் தொடங்கியுள்ளது. இப்பணியில் 150-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். துல்லியமான எண்களை பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களைக் கண்டறிய, அந்தப் பள்ளி ஆசிரியர்கள், அந்தந்த பள்ளிகளுக்குச் சென்று, எத்தனை பேர் பள்ளியை விட்டு பாதியில் வந்து சென்றுள்ளனர் என்ற விவரங்களைப் பெற்று கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, சர்வே என்ற மொபைல் செயலியில் பதிவேற்றப்படுகிறது. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்கின்றனர்.

மேலும் கண்டறியப்பட்டுள்ள குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 4 நாட்களில் 500 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் கல்வியாண்டிலும் அவர்களுக்கு தொடர்ந்து கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...