பல்லடம் அருகே பெண்ணை தாக்கிய ஊராட்சித் தலைவர் - போலீசார் விசாரணை

பல்லடம் அருகே சொத்து பிரச்னையால் ஏற்பட்ட முன்விரோதத்தால் பெண் ஒருவரை , பருவாய் ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன் இரும்புக் கம்பியால் தாக்கியதில், படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். விவசாயியான அருண்குமார் 25 மாடுகள், கோழிப்பண்ணை வைத்து வளர்த்து வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அருண்குமார் வளர்த்து வரும் மாடுகள் திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டு சோர்வுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.



நேற்று முன்தினம் ஒரு மாடு மட்டும் திடீரென இறந்துள்ளது. இது குறித்து, கால்நடை மருத்துவரை வரவழைத்து பரிசோதனை செய்த, அருண்குமார் மாடுகள் உட்கொள்ளும் புண்ணாக்கில் யாரோ விஷம் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இரண்டு வருடங்களாக அருண்குமாருக்கும் அவரது அக்கா மற்றும் அருண்குமாரின் மைத்துனரும் பருவாய் ஊராட்சி மன்ற தலைவருமான ரவிச்சந்திரன் ஆகியோருக்கு இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அருண்குமாரின் வீட்டுக்கு திடீரென வந்த பருவாய் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், அருண்குமாரின் மனைவி கவிதாவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த கவிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கவிதா பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் குறித்து கவிதா அளித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.



இது குறித்து கவிதா கூறுகையில், எங்களது வாழ்வாதாரமே மாடுகளை நம்பி தான் உள்ளது. 25 மாடுகளை கொல்வதற்கு விஷம் வைத்தது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மீது சந்தேகம் உள்ளது. மாடுகள் இறந்தது தொடர்பாகத்தான் பேச வருகிறார் என நினைத்தேன்.

என்னை இரும்பு கம்பியால் ஊராட்சி தலைவர் தாக்கினார். பருவாய் கிராமத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. தாக்குதலில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...