பல்லடம் அருகே பெண்ணை தாக்கிய ஊராட்சித் தலைவர் - போலீசார் விசாரணை

பல்லடம் அருகே சொத்து பிரச்னையால் ஏற்பட்ட முன்விரோதத்தால் பெண் ஒருவரை , பருவாய் ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன் இரும்புக் கம்பியால் தாக்கியதில், படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். விவசாயியான அருண்குமார் 25 மாடுகள், கோழிப்பண்ணை வைத்து வளர்த்து வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அருண்குமார் வளர்த்து வரும் மாடுகள் திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டு சோர்வுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.



நேற்று முன்தினம் ஒரு மாடு மட்டும் திடீரென இறந்துள்ளது. இது குறித்து, கால்நடை மருத்துவரை வரவழைத்து பரிசோதனை செய்த, அருண்குமார் மாடுகள் உட்கொள்ளும் புண்ணாக்கில் யாரோ விஷம் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இரண்டு வருடங்களாக அருண்குமாருக்கும் அவரது அக்கா மற்றும் அருண்குமாரின் மைத்துனரும் பருவாய் ஊராட்சி மன்ற தலைவருமான ரவிச்சந்திரன் ஆகியோருக்கு இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அருண்குமாரின் வீட்டுக்கு திடீரென வந்த பருவாய் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், அருண்குமாரின் மனைவி கவிதாவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த கவிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கவிதா பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் குறித்து கவிதா அளித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.



இது குறித்து கவிதா கூறுகையில், எங்களது வாழ்வாதாரமே மாடுகளை நம்பி தான் உள்ளது. 25 மாடுகளை கொல்வதற்கு விஷம் வைத்தது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மீது சந்தேகம் உள்ளது. மாடுகள் இறந்தது தொடர்பாகத்தான் பேச வருகிறார் என நினைத்தேன்.

என்னை இரும்பு கம்பியால் ஊராட்சி தலைவர் தாக்கினார். பருவாய் கிராமத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. தாக்குதலில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...