தமிழக விவசாயிகளால்தான் திமுக அரசு வீழும்..! - பாஜக மாநில விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் காட்டம்

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பிஏபி வாய்க்கால் கரையோரம் உள்ள விவசாயிகளின் ஆழ்துளை கிணறு மற்றும் மின் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். விவசாயிகளால்தான் திமுக அரசு வீழப்போகிறது என்று பாஜக மாநில விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதப்பூர் ஊராட்சியில் நல்லாகவுண்டம் பாளையத்தில் மத்திய அரசின் இல்லம்தோறும் குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.



இதில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் ஜி கே நாகராஜ் கலந்து கொண்டார்.



இதைத் தொடர்ந்து, பொங்கலூரில் பாஜக விவசாய அணியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. விவசாய அணி மாநில தலைவர் ஜிகே நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



இது குறித்துப் ஜி கே நாகராஜ் பேசியதாவது:

பிஏபி வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள விவசாயிகளின் ஆழ்துளை கிணறு மற்றும் கிணறுகளுக்கான மின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் வறட்சியை போக்கும் வகையில் குளம் குட்டைகளில் நீர் செரிவூட்டும் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்.

தக்காளி, வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு மாநில அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.

வாழை போன்ற பயிர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டை தனிப்பட்ட விவசாயிகளின் இழப்பீட்டை பொருத்து வழங்க வேண்டும். கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் கால்நடை தீவனங்களை மானிய விலையில் அரசு கொள்முதல் செய்து தர வேண்டும்,

குறைந்தபட்ச விலையாக மாட்டு பாலுக்கு 50 ரூபாயாகவும், எருமை பாலுக்கு 70 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். அரசு கொள்முதல் செய்யும் கொப்பரை விலையை கிலோ ஒன்றுக்கு 150 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும்.

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசே தேங்காயை கொள்முதல் செய்து பொது விநியோக திட்டத்தின் கீழ் மதிப்பு கூட்டப்பட்டு தேங்காய் எண்ணெய்யாக வழங்க வேண்டும்.

ஆனைமலை நல்லாறு திட்டத்தினை உடனடியாக செயல்படுத்த வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை சரியாக தமிழக அரசு பராமரிக்காததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது.

நெல் கொள்முதல் நிலையங்களை சரி செய்யாவிட்டால் விரைவில் நெல் மூட்டைகளோடு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்துவார்கள். விவசாயிகளுக்கு திமுக அரசு எந்த ஒரு திட்டங்களையும் முறையாக செயல்படுத்தவில்லை. விவசாயிகளால் தான் திமுக அரசு வீழப்போகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...