வால்பாறை அருகே யானைக் கூட்டத்துடன் சேர்ந்த தும்பிக்கையில்லா குட்டியானை!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அதிரப்பள்ளி வன பகுதிக்குள் சுற்றத் திரிந்த தும்பிக்கை இல்லாத யானைக்குட்டி, நீண்ட நாட்களுக்குப் பிறகு யானைக் கூட்டத்துடன் சேர்ந்தது. இதை புகைப்படம் எடுத்த கேரள வனத்துறையினர், குட்டி யானை உடல் நலத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.


கோவை: திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு தும்பிக்கை இல்லாமல் குட்டியானை ஒன்று சுற்றுலா பயணிகளால் புகைப்படம் எடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், குட்டி யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். தாயின் பராமரிப்பில் உள்ள குட்டி யானை அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றதால், குட்டி யானைக்கு மருத்துவ உதவி செய்ய முடியாமல் வனத்துறையினர் பின் வாங்கினர்.



நீண்ட நாட்களுக்கு பிறகு, அதிரப்பள்ளி வனப்பகுதியில் குட்டி யானையின் தாய் உள்ளிட்ட யானைகள் கூட்டத்துடன் இணைந்து அந்தக் குட்டி யானை வந்தது. இதை அப்பகுதி வனத்துறையினர் புகைப்படம் எடுத்து குட்டியானையில் உடல் ஆரோக்கியத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

குட்டியானை ஆற்றில் தண்ணீர் குடிக்கும் பொழுது முதலை கடித்து இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். மேலும், தும்பிக்கையில்லாத அந்த குட்டி யானையின் உடல்நலம் நன்றாக உள்ளதாக கேரளா வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...