தாராபுரம் அருகே இரவு நேரங்களில் மரங்களை வெட்டிக் கடத்தும் மர்ம கும்பல்!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றுப்படுகையில் வளர்க்கப்பட்டு வந்த 7 லட்சம் மதிப்பிலான மரங்களை வெட்டி கடத்திய கும்பலைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஓடும் அமராவதி ஆறு, தாராபுரம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கு உயிர் நாடியாக இருந்துவருகிறது.

இந்த ஆற்றின் கரையோர பகுதியில் இருபுறமும் வேம்பு, தீக்குச்சி மரம், புளியமரம், சவுக்கு, தேக்கு மரம் உள்ளிட்ட மரங்களை வனத்துறையினர் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அலங்கியம் கூடுதுறை பகுதியில் புறம்போக்கு நிலத்தில் உள்ள விலை உயர்ந்த மரங்களை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் வெட்டி லாரிகள் மூலம் கடத்திச் சென்று விட்டனர்.

இந்த சம்பவம், கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடந்த நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் மர்ம நபர்களால் வெட்டி கடத்தப்பட்ட மரங்களின் மதிப்பு ரூ.7 லட்சம் வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மரங்களை வெட்டி கடத்தி சென்ற கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...