பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் நபர் - திருப்பூர் மாவட்ட எஸ்.பியிடம் புகார்

திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் தினேஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் அருகே பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட எஸ்.பியிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் 30 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றன.

அதேபகுதியில் வசிக்கும் கருப்பண்ணசாமி என்கிற தினேஷ் கடந்த சில வருடங்களாக கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள குடும்பங்களின் பலவீனங்களை அறிந்து கொண்டு தொலைபேசியிலும் நேரிலும் மிரட்டி பணம் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், பணம் கொடுக்க மறுப்பவர்களை கஞ்சா விற்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து, கைது செய்ய வைப்பேன் அல்லது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசுவேன் என கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்த கணக்கம்பாளையம் பகுதி மக்கள், பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...