திருப்பூரில் காவலர்களின் மனஉளைச்சலை போக்க யோகா பயிற்சி - காவலர்கள் பங்கேற்பு!

திருப்பூரில் பணியாற்றும் காவலர்களுக்கு பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன உளைச்சலை போக்கும் வகையில், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: திருப்பூரில் காவலர்களுக்கு மன உளைச்சலை போக்கும் வகையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் யோகா பயிற்சி நடைபெற்றது.

காவல்துறையில் பணியாற்றக்கூடிய காவலர்கள் ஒவ்வொரு நாளும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.



இந்நிலையில் காவலர்களுக்கு சரியான உடற்பயிற்சி மற்றும் மன வலிமையை ஊக்கப்படுத்தும் விதமாக யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் யோகா பயிற்சி நடைபெற்றது.



மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில், மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் வாழ்க வளமுடன் அமைப்பின் சார்பில் அதிவிரைவு படை மற்றும் ஆயுதப்படை காவலர்களுக்கு இந்த யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.



இந்த யோகா பயிற்சியில் மன வலிமையை ஊக்கப்படுத்தும் யோகா பயிற்சியும், மூச்சுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.



இந்த நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்ற கூடிய காவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...