வனத்தை விட்டு வெளியேறிய மான்.. துரத்திய நாய்கள்..! - மானை மீட்டு வனப்பகுதியில் விட்ட வனத்துறையினர்!

பெரியநாயக்கன்பாளையம் அருகே மலைப்பகுதியில் இருந்து வெளியேறி மலை அடிவாரத்திற்கு வந்த மானை, நாய்கள் துரத்தியதால், தப்பிப்பதற்காக தெற்குப்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் மான் புகுந்துள்ளது. மானை மீட்டு வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விட்டனர்.



கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயிடம் தப்பிய மானை, வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறைக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுயானைகள், சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்டவைகள் வாழ்ந்து வருகின்றன.

இந்த விலங்குகள் அவ்வப்பொது உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் வந்து விடுகின்றன. உடனடியாக வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து காட்டு விலங்குகளை வனப்பகுதிக்கு அனுப்பி வைப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.



இந்த நிலையில் நேற்று மாலை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறைக்குட்பட்ட மலைப்பகுதியில் இருந்து ஒரு மான் வழி தெரியாமல் மலை அடிவாரத்திற்கு வந்துள்ளது.



அப்போது அங்கிருந்த நாய்கள் அந்த மானை துரத்த மான் தப்பிப்பதற்காக தெற்குப்பாளையம் பகுதிக்குள் உள்ள ஒர் வீட்டின் புகுந்துள்ளது. அதன்பிறகு அதனால் வெளியே வரமுடியவில்லை.

அதற்குள் அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து மானை துரத்தி வந்த நாயை விரட்டினர். தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த மானை பாதுகாப்பாக பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டனர்.

அதற்குள் அங்கிருந்த பொதுமக்கள் மானை வீடியோ எடுத்து சமூக வலைப்பக்கங்களில் பரப்பியுள்ளனர். அது தற்போது வைரலாகியுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...