எங்கள் சமூகம் மீது அவதூறு பரப்புகிறார்..! - நீலகிரி திமுக எம்.பி. ஆ.ராசா மீது பண்டார குல நல சங்கம் புகார்!

முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா பண்டார குல சமுதாயத்தினர் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பரப்பியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பண்டார குல நல சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.



திருப்பூர்: நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு பண்டார குல நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பண்டார சமுதாயத்தை இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆ.ராசாவின் இந்த பேச்சு, யூடியூப் தளத்தில் வெளியாகி, எங்களது சமுதாய மக்கள் பிற சமுதாய மக்களிடம் மிகவும் அவமானப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தில் எடுத்துள்ள உறுதி மொழியின் படி இந்திய நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார்.



எனவே நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது குற்றவியல் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். அதேபோல் யூ டியூபில் தங்கள் சமுதாயம் பற்றி பதிவிடப்பட்ட வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...