பல்லடம் அருகே விவசாய தோட்டத்தில் 20 மரங்களை வெட்டிய மின்வாரிய ஊழியர்கள் - விவசாயி புகார்!

பல்லடம் அருகே அய்யம்பாளையத்தில் விவசாய தோட்டத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி வீழ்த்திய மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்லடம் காவல் நிலையத்தில் விவசாயி புகார் அளித்துள்ளார்.



திருப்பூர்: பல்லடம் அருகே விவசாய தோட்டத்தில் இருந்த 20 மரங்களை வெட்டிய மின்வாரிய ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பையகவுண்டர் என்பவரது மகன் வேலுச்சாமி. விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 1.75 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில், மழை பொய்த்துப் போனதால் தற்போது தரிசு நிலமாக உள்ளது.



இந்த நிலையில் வேலுச்சாமி குடும்பத்துடன் காளி வேலம்பட்டியில் வசித்து வரும் நிலையில் 10 நாட்களுக்கு ஒரு முறை தனது தோட்டத்திற்கு சென்று வருவது வழக்கம். இதனிடையே, இன்று வேலுச்சாமி தனது தோட்டத்திற்கு சென்று பார்த்த போது வேப்பமரம், வெள்ளவேலாம்மரம், கிளுவை மரம் போன்ற 20 மரங்களை மர்மநபர்கள் வெட்டியது தெரியவந்தது.

இந்நிலையில் அருகில் மின் ஒயர்கள் செல்வதால் சந்தேகத்தில் அய்யம்பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலக அதிகாரிகளை விவசாயி வேலுச்சாமி நாடியுள்ளார்.



இதுகுறித்து அதிகாரிகளிடம் வேலுச்சாமி கேட்டபோது "உங்களது பக்கத்து தோட்டத்துக்காரர் மோகன் என்பவர்தான் மரங்களை வெட்ட சொன்னார் என அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.



எனவே மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி விவசாயி வேலுச்சாமி பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் ஆசையாக வளர்த்த மரங்களை இது போன்று வெட்டி வீழ்த்தினால் சாதாரண விவசாயி என்ன செய்ய முடியும். மழை பொய்த்துப் போனதால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளதால் தரிசு நிலத்தில் மரங்களை வளர்த்தால் இதுபோன்று குட்டச் சம்பவங்களில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயி வேலுச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...