கங்கையில் புனித நீராடிய எம்எல்ஏ வானதி சீனிவாசன் - மக்கள் நலனுக்காக கடவுளிடம் பிரார்த்தனை!

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்குப் பிறகு உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ள பாஜக மகளிரணி தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், ரிஷிகேஷியில் உள்ள கங்கை நதியில் நீராடிய புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து அனைவரின் நலனுக்காக பிரார்த்தித்ததாக பதிவிட்டுள்ளார்.


கோவை: கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ரிஷிகேஷில் உள்ள கங்கை நதியில் புனித நீராடிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சட்டமன்றம் முதல் கட்சி நிகழ்ச்சிகள் வரை விறுவிறுப்பாக இயங்கி வருபவர் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு பிறகு ஆன்மிக தலமான உத்தரகண்ட் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி , கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் இந்து குருக்களை சந்தித்து அவர்களுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

அதனை தொடர்ந்து ரிஷிகேஷில் உள்ள கங்கை நதி கரையில் புனித நீராடி அந்த புகைப்படங்களை வானதி சீனிவாசன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், மக்களின் நன்மைக்காக பிரார்த்தித்துக் கொண்டதாக வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.

இந்துக்களின் புனித நதியாக திகழும் கங்கை நதியானது 2,525 கிலோமீட்டர் சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கங்கை கரையில், ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பாட்னா, கொல்கத்தா ஆகிய முக்கிய நகரங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...