கோவை நஞ்சுண்டாபுரம் அருகே தரைப்பால தடுப்பு சுவரில் பைக் மோதி விபத்து - ஒருவர் பலி!

நஞ்சுண்டாபுரம் பகுதியிலுள்ள தரைப்பாலத்தில் சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில், பின்னால் இருந்த தொழிலாளி, பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது தரைப்பாலத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (49). கூலி தொழிலாளியான இவர், இன்று காலை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த வினோத் (32), என்பவருடன் மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் இருவரும் போதையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

இருசக்கர வாகனத்தை வினோத் ஓட்டிச்சென்ற நிலையில், குமார் பின்னால் அமர்ந்துள்ளார். இருவரும் நஞ்சுண்டாபுரம் அருகே உள்ள தரைப்பாலம் அருகே வந்த போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.



இதில், குமார் தூக்கிவீசப்பட்டு தரைப்பாலத்தில் இருந்து சுமார் 30 அடி கீழே விழுந்துள்ளார். அப்போது அவரது தலையில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வாகனத்தை ஓட்டிச்சென்ற வினோத் காயமடைந்தார்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து, அங்கிருந்தவர்கள் போத்தனூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் சந்தேகம் உள்ளதாக குமார் உறவினர்கள் கூறியதால் வினோத்திடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...