உடுமலை பைபாஸில் இணைப்பு சாலை துண்டிப்பு - வாகன ஓட்டிகள் அவதி!

உடுமலையில், பிரதான சாலைகளை இணைக்கும் பகுதியில், மழை நீர் வடிகால் பணிக்காக பாலம் இடிக்கப்பட்டு தோண்டப்பட்ட பள்ளம் சீரமைக்கப்படாமல் 7 மாதமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே பிரதான சாலையில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்ட பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிறுத்தம் அருகே, பொள்ளாச்சி சாலையையும், பைபாஸ் சாலையையும் இணைக்கும் வகையில், சாலை அமைக்கப்பட்டுள்ளது. பழனிசாலை, பொள்ளாச்சி சாலையில் வரும் வாகனங்கள் மற்றும் அரசு போக்குவரத்து பணிமனைக்கு செல்லும் பேருந்துகளுக்கு பிரதான வழித்தடமாக இருந்தது.

கடந்த, ஏழு மாதத்திற்கு முன், இப்பகுதியில் மழை நீர் வடிகால் துார்வாரும் பணியின் போது, மழை நீர் வடிகால் மீதிருந்த பாலம் அகற்றப்பட்டதோடு, மழை நீர் வடிகாலும் இடிக்கப்பட்டது. இதனால் பைபாஸ் சாலை மற்றும் பொள்ளாச்சி சாலை இணைக்கும் வழித்தடம் துண்டிக்கப்பட்டது.



அதற்கு பின், கட்டட கழிவுகள் அகற்றப்படாமலும், மழை நீர் வடிகால் பாலம் கட்டப்படாமலும் உள்ளது. இதனால், இரு சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.



கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட இவ்வழியாக வந்த வாலிபர் ஓருவர் மழைநீர் வடிகாலுக்கு தோண்டப்பட்ட குழியில் விழுந்து காயம் அடைந்தார். எனவே, நகராட்சி அதிகாரிகள், கட்டட கழிவுகளை அகற்றி, பாலம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...