திரைப்படமாக உருவாகிறது கோவை விஞ்ஞானி ஜி.டி நாயுடு சுயசரிதை - கதை நாயகனாக நடிக்கும் மாதவன்!

திரைப்பட நடிகர் மாதவன் நடிப்பில் கோவையை சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு-வின் சுயசரிதை திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஜி. டி நாயுடு நாயுடுவின் சுயசரிதையையும், அவரது சாதனைகளையும் தழுவி திரைப்படம் உருவாக உள்ளது.


கோவை: கோவையை சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாறு குறித்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள முக்கிய விஞ்ஞானிகளில் முக்கியமானவர் கோவையை சேர்ந்த ஜி.டி.நாயுடு. தமிழ் வழியில் 4 ஆம் வகுப்பு வரை படித்த ஜி.டி.நாயுடு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் அவர் கண்டுபிடித்த கருவிகள் ஏராளம்.

ஷேவிங் ரேசர், ஜுசர், உருளைக்கிழங்கு தோல் எடுக்கும் கருவி, கீ வால் கிளாக், ரேடியோகிராம், தமிழ் டயல் ரேடியோ, கட்டட கலவை, எலக்ட்ரிக் மோட்டார், கால்குலேட்டர், பிளேடு, ஆட்டோமெடிக் டிக்கெட் மெஷின் என ஜி.டி.நாயடு கண்டுபிடித்த கருவிகள் பட்டியல் வெகுநீளம்.

தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலக்கட்டத்தில், பல்வேறு கண்டுபிடிப்புகளை பொதுமக்களுக்காக வழங்கிய ஜி.டி.நாயுடு குறித்து இளம் தலைமுறையினரிடையே கொண்டு செல்ல வேண்டும் எனும் அடிப்படையில் அவரது வாழ்க்கை வரலாறு குறித்து படம் தயாரிக்கப்பட உள்ளது.

இந்த படத்தில் ஜி.டி.நாயுடு வாக நடிகர் மாதவன் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெயரிடப்படாத இந்த படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் தமிழக விஞ்ஞானி ஜி. டி நாயுடு நாயுடுவின் சுயசரிதையையும், அவரது சாதனைகளையும் தழுவி திரைப்படம் உருவாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் பழைய காரை பார்த்தபடி ஜி.டி.நாயுடு நின்றபடி உள்ளது. மேலும், மாதவன் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் எதுவும் இடம்பெறவில்லை. பல்வேறு கண்டுபிடிப்புகளால் கோவை நகருக்கு பெருமை சேர்த்த ஜி.டி.நாயுடு-வின் பயோபிக் படம் உருவாவதை அறிந்து கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...