கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா - பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி உலா வரும் வனவிலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


நீலகிரி: கோத்தகிரியில் இருந்து அரவேணு செல்லும் சாலையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் அடிக்கடி சிறுத்தை கரடி நடமாட்டம் இருந்து வருகிறது.

இதனிடையே நேற்று நள்ளிரவு சிறுத்தை ஒன்று உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடிக்கடி உலாவரும் கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளால் கிராம மக்கள், வெளியே செல்ல இயலாமல் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு கருஞ்சிறுத்தைகள், இரண்டு சிறுத்தைகள், மூன்று கரடிகள் இதே பகுதியில் உலா வந்தன.



தற்போது சிறுத்தை நடமாடி வந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

குடியிருப்பு பகுதியில் அடிக்கடி உலா வரும் வனவிலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...