சென்னையில் குளத்தில் மூழ்கி அர்ச்சகர்கள் உயிரிழப்பு - முதல்வர் நிவராணம் வழங்க உத்தரவு

சென்னை நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியில் உள்ள தருமேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டும் நிகழ்வின்போது 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு நிதியுதவியும் அறிவித்துள்ளார்.


சென்னை: சென்னை மூவரசம்பட்டு குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

பங்குனி உத்திர நாளை முன்னிட்டு சென்னை. மூவரசம்பட்டு பகுதி கோவில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்வின் போது, குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.



அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு தற்போது குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், குளத்தில் மூழ்கி உயிரிழந்த அர்ச்சகர்கள் குடும்பத்தாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் அன்பரசன் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...